உடல் நலம் சரியில்லாததால் வாலிபர் தற்கொலை

நெய்வேலி : நெய்வேலியில் உடல் நலம் சரியில்லாததால் மனமுடைந்த வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


நெய்வேலி அடுத்த பெரியகாப்பான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால் மகன் இளையராஜா. 37: கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.



இதன் காரணமாக மனமுடைந்த அவர் நேற்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெய்வேலி தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட இளையராஜா மீது நெய்வேலி தெர்மல் போலீசில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இரண்டு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement