மது பாட்டில் விற்ற பெண் கைது

கச்சிராயபாளையம், : கரடிசித்துார் கிராமத்தில் மது பாட்டில் விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார் தலமையிலான போலீசார் கரடிசித்துார் பகுதியில் நேற்று ரெய்டு சென்றனர். அப்போது தனது வீட்டின் அருகே மறைத்து வைத்து மதுபாட்டில் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த பல்லக்காட்டான் மனைவி ரேகா, 32; என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement