அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா

புதுச்சேரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை துவங் குகிறது.

புதுச்சேரி, சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும்,நவராத்திரி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கானநவராத்திரிவிழா நாளை துவங் குகிறது. வரும் 28ம் தேதி வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, காலை மற்றும் மாலையில்உற்சவங்கள் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement