அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாதஇறுதி நாளில் ஊதியம் வழங்க வேண்டும். ஏழாவது ஊயதிக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது, நிலுவையில் உள்ள போனஸ் மற்றும் பஞ்சப்படி ஆகியவற்றை காலத்தோடு வழங்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்தில், 3 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த அடிப்படையில், பணி செய்யும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகைகள் வலியுறுத்தப்பட்டன. சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement