காந்தி ஜெயந்தி; அமைதி ஊர்வலம்

அனுப்பர்பாளையம்,: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, திருப்பூர் வடக்கு ஒன்றிய பாலர் பூங்கா சார்பில், பாலர்களின் சங்கமம் என்ற நிகழ்ச்சி பெருமாநல்லுாரில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சந்துரு, முன்னிலை வைத்தார். வடக்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரேவந்த் வரவேற்றார்.

ஊராட்சி தலைவர் சாந்தாமணி, துணைத் தலைவர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட பொருளாளர் கார்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

குழந்தைகளின் கலை நிகழ்ச்சி மற்றும் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, போதை மற்றும் வன்முறைக்கு எதிராக அமைதியை வலியுறுத்தி குழந்தைகளின் ஊர்வலம் நடைபெற்றது. செல்வ மஹாலில் இருந்து துவங்கி, நால் ரோட்டில் நிறைவு பெற்றது.

அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. காந்திஜெயந்தி உறுதி மொழியை வடக்கு ஒன்றிய இணைச் செயலாளர் திவ்யதர்ஷினி கூற, குழந்தைகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Advertisement