தொண்டையில் சிக்கியது டப்பா குழந்தையை மீட்டனர் டாக்டர்கள்

திருமங்கலம்: திருமங்கலத்தில் குழந்தையின் தொண்டையில் சிக்கிய தைல டப்பாவை ஒரு மணி நேரம் போராடி அரசு டாக்டர்கள் வெளியே எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.

திருமங்கலம் ரோஜா தோட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஹசீனா பானு. இவரது இரண்டரை வயது மகள் ஆலியா. ஹசினா பானு வேலைக்கு செல்வதால் குழந்தையை தனது அம்மா மெஹரஜ் பானுவிடம் விட்டுச் செல்வார். நேற்று முன்தினமும் குழந்தையை விட்டு விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

நேற்று இரவு 7:00 மணிக்கு குழந்தை தரையில் கிடந்த தைல டப்பாவை வாயில் வைத்து விளையாடியுள்ளது. எதிர்பாராத விதமாக தைல டப்பா தொண்டையில் சிக்கியது. குழந்தை பேச முடியாமல், அழ முடியாமல், மூச்சு விட சிரமப்பட்ட நிலையில் தரையில் கிடந்துள்ளது. குழந்தையின் பாட்டி மெகரஜ் பானு குழந்தையை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பணியில் இருந்த டாக்டர் சிவகரன், நர்சுகள் ஒரு மணி நேரம் போராடி குழந்தையின் தொண்டையில் சிக்கியிருந்த தைல டப்பாவை வெளியில் எடுத்து குழந்தையை காப்பாற்றினர்.

Advertisement