செயினை  பறித்தவர் கைது

சிவகங்கை: சிவகங்கையில் நண்பனின் செயினை பறித்து சென்றவரை நகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

டி.புதுார் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி 58. மதுரை முக்கு பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் 39 இருவரும் நண்பர்கள். இருவரும் காட்டுகுடியிருப்பு பகுதியில் மது அருந்தியுள்ளனர்.

போதையில் இருந்த சுப்பிரமணியின் இரண்டரை பவுன் தங்க செயின், போன், டூவீலரை பறித்துகொண்டு பாக்யராஜ் சென்றார். சுப்பிரமணி நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் பாக்யராஜை கைது செய்து அவரிடம் இருந்து செயின், டூவீலர், அலைபேசியை பறிமுதல் செய்தனர்.

Advertisement