தேனி தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை நேரம் நீட்டிப்பு

தேனி : தேனி தபால் அலுவலத்தில் காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஆதார் சேவை மையம் இயங்கும்'என , கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

தேனி தபால் கோட்டத்தில் போடி, பெரியகுளம் தலைமை தபால் அலுவலகங்கள் காலை 9:00 முதல் இரவு 8:00 மணிவரையும் தேனி தபால் நிலையத்தில் மாலை 6:00 மணிவரை ஆதார் சேவை மையம் இயங்கியது.

வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் பணி முடித்து வந்து ஆதார் மைய சேவை பெற முடியாமல் இருந்தனர்.

சேவை நேரம் நீட்டிக்க கோரினர். இதை தொடர்ந்து தேனி தபால் அலுவலகத்தில் அக். 3 முதல் இரவு 8:00 மணிவரை சேவை நீடிக்கப்பட்டுள்ளது.

இங்கு ஆதார் புதிய பதிவு, 5 மற்றும் 15 வயது வரை பயோ மெட்ரிக் திருத்தம் இலவசமாக பதிவு செய்யப்படும்.

முகவரி மாற்றம், பாலினம், பிறந்த தேதி, அலைபேசி எண், இ மெயில் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு ரூ.50 கட்டணமாகவும், பயோ மெட்ரிக் திருத்த சேவைக்கு கருவிழி, கைரேகை, புகைப்படம் மாற்றத்திற்கு ரூ.100 கட்டணமாக பெறப்படும். கோட்ட கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.

Advertisement