லாரிகள் மோதி விபத்து: டிரைவர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே ரோட்டோரம் பஞ்சரான வாகனத்தின் மீது எதிரே வந்த வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

உத்தமபாளையம் அருகே ஓடைப்பட்டியைச் சேர்ந்த டிரைவர் செல்லத்துரை 34. லோடு லாரி வைத்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் இருந்து லோடு ஏற்றி சின்னமனூர் வந்து கொண்டிருந்தார். தேவதானப்பட்டி அருகே லாரி டயர் பஞ்சரானதால் ரோட்டோரம் வாகனத்தை நிறுத்தி இருந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே காப்பிலிங்கபட்டியைச் சேர்ந்த மாரிக்காளை 36. தேனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி லாரியை ஓட்டி சென்றார். எதிர்பாராத விதமாக ரோட்டோரம் நிறுத்தி இருந்த செல்லத்துரை லாரி மீது மோதியது. இதில் லாரி சேதமடைந்தது. செல்லத்துரைக்கும் காயம் ஏற்பட்டது. பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீசார் மாரிக்காளையை கைது செய்தனர்.

Advertisement