மதுவிற்ற நால்வர் கைது : 56 மது பாட்டில்கள் பறிமுதல்

தேனி: தேனி நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதி இன்றி சட்டவிரோதமாக மது விற்ற மாரியப்பன், சுபாஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 மதுபாட்டில்கள் கைப்பற்றினர்.

வீரபாண்டி போலீசார் ஆய்வில் முத்துதேவன்பட்டியில் சட்டவிரோதமாக மதுவிற்ற மகேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து 10 மதுபாட்டில்களை கைப்பற்றினர். அல்லிநகரம் போலீசார் ஒண்டிவீரன் காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அதே பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்ற சுந்தர்ராஜை 28, கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 13, 500 மதிப்புள்ள 31 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.

Advertisement