டிராக்டர் மீது லாரி மோதி கோர விபத்து; 10 பேர் பலி

1

மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தில் நள்ளிரவில் டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.



நேற்று நள்ளிரவு 1 மணியளவில் 10க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வாரணாசியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. கத்வா எல்லையில் உள்ள ஜி.டி., சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து டிராக்டரின் பின்புறமாக அதிவேகமாக இடித்துள்ளது.


இதில், டிராக்டர் நிலைகுலைந்து போனது. இதில், பயணித்தவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர். பதோஹி மாவட்டத்தில் வேலையை முடித்துக் கொண்டு, டிராக்டரில் வீடு திரும்பிய போது விபத்து நிகழ்ந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் இரங்கல் தெரிவித்ததுடன், காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement