வெள்ளகோவிலில் இரு வீடுகளில் 4 பவுன் நகை ரூ.45 ஆயிரம் பணம் திருட்டு

காங்கேயம்: வெள்ளகோவில் அருகே இரு வீடுகளில் பூட்டை உடைத்து நான்கு பவுன் நகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வெள்ளகோவில் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ஊராட்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார்,30, திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று விட்டார். வீட்டிலிருந்து அவருடைய தாயார் வெளியே சென்று விட்டு, பின் மதியம் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவழில் வைத்திருந்த மூன்று பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதே போல் அருகில் வசிக்கும் சக்திவேல்,38, என்பவர் வீட்டிலும் பூட்டை உடைத்து பீரோவில் வைக்கப்படுகின்ற ஒரு பவுன் மோதிரம் மட்டும் 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement