அளவில்லா அன்பு ரசிகர்களே! ரஜினிகாந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் அறிக்கை

2

சென்னை; உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைவருக்கும் உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.


@1brஉடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ரத்தநாளம் வீக்கமே உடல்நலம் பாதிக்க காரணம் என்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. உரிய சிகிச்சைக்கு பின்னர், ரஜினிகாந்த் இன்று தமது வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் ரஜினிகாந்த் இருந்த போது ஏராளமான ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் அவரது உடல்நலம் குணம் பெற பிரார்த்தனை செய்தனர். இந் நிலையில் ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

மற்றும் நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கிறார்.


அறிக்கைக்கு முன்னதாக எக்ஸ் வலை தள பக்கத்தில் பிரதமர் மோடி,முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆளுநர் ஆர்.என். ரவி, எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோருக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

Advertisement