பாகிஸ்தான் செல்கிறார் ஜெய்சங்கர்; என்ன விஷயம்னு தெரியுமா!

2


புதுடில்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு , பாகிஸ்தானுக்கு பயணிக்க உள்ளது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து இருந்தது. வழக்கமாக இந்த மாநாட்டில் ஒரு நாட்டின் அதிபர் அல்லது பிரதமர்கள் பங்கேற்பார்கள். இந்தியா சார்பில் வெளியுறவு அல்லது பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்று இருந்தனர். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பங்கேற்று இருந்தார்.


இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள உள்ளார். அக்., 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அவர் தங்கியிருக்க உள்ளார்.இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.


காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பிரச்னை உள்ள நிலையில் ஜெய்சங்கர் பாகிஸ்தான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement