டிரைவர் தற்கொலை 

புதுச்சேரி : புதுச்சேரி, பிரியதர்ஷினி நகரைச் சேர்ந்தவர் செந்தமிழ்வளவன், 24; டிரைவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவரது மனைவி மனைவி ஆஷிகா. இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை, 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு ஆளான செந்தமிழ்வளவன் நேற்று முன்தினம் இரவு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அவரது அறைக்கு சென்று மின்வசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ஆஷிகா கொடுத்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement