காங்கிரசை வழிநடத்தும் அர்பன் நக்சல்கள்: பிரதமர் மோடி தாக்கு
வாஷிம்: '' காங்கிரஸ் கட்சியை, அர்பன் நக்சல்கள் தான் இயக்குகின்றனர், '' என பிரதமர் மோடி கூறினார்.
வாசிம் மாவட்டத்தில், விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளில் ரூ.23 ஆயரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதன் பிறகு அவர் பேசியதாவது: பிரதமர் கிசான் சம்மன் நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 9.5 கோடி பேர் 20 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளனர்.
டில்லியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது.
அர்பன் நக்சல்கள் இணைந்து காங்கிரசை இயக்குகின்றனர். மக்கள் ஒன்றிணைந்து, காங்கிரசின் ஆபத்தான திட்டத்தை தோற்டிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால், தங்களது திட்டம் தோல்வியடையும் என்பது காங்கிரசுக்கு தெரியும். இந்தியாவிற்கு நற்பெயர் கிடைக்ககூடாது என நினைப்பவர்களுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுதை அனைவரும் பார்க்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
அசத்தல்
போஹாராதேவி என்ற இடத்தில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
அஞ்சலி
தொடர்ந்து, வாசிம் மாவட்டத்தில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5வது தவணையையும் பிரதமர் வழங்கினார்.
வாசகர் கருத்து (7)
M.Sam - coimbatore,இந்தியா
05 அக்,2024 - 17:04 Report Abuse
When they are URBAN NAXALS WHO ATE YOU?
You are RURAL Naxal only
So both ate Naxal only
Indiabs are really in a bad shape because of you people feud
0
0
Reply
Rajan - Bangalore,இந்தியா
05 அக்,2024 - 17:03 Report Abuse
எந்த கோஷ்டி என்று குறிப்பிடவில்லை ஆதனால் யாரை கூறுகிறார் என்று தெரியவில்லை என்று நம்ம ஊர் ஸ்டைலில் பதில் சொல்லிவிட்டு போக வேண்டியது தான்
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
05 அக்,2024 - 15:58 Report Abuse
என்னதான் கதறினாலும் 100 ஆண்டுகளாக வாழ்ந்த குடும்பங்கள் , பாரம்பரியம், அவர்களுக்கு எனவே வாழ்ந்த துறைகள், என்ன பட்டம் கொடுத்தாலும் எல்லோருக்கும் வாய் ஒன்றே மூலதனம், நாங்கள் செய்யவில்லை, பிறகு திருப்பிக்கொடுக்கிறோம், அபராதம் கட்டுகிறோம் , இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், முடிவு ஹிரண்யாய நமஹ
0
0
Reply
அப்பாவி - ,
05 அக்,2024 - 15:58 Report Abuse
பா.ஜ வை வழிநடத்தும் க்ரீடி(greedy) கார்ப்பரேட்கள்.
0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
05 அக்,2024 - 15:53 Report Abuse
மெழுகினால் செய்த சிலையும் புழுகினால் செய்த சிலையும் வெயிலேற உருகி மறையும்.
0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
05 அக்,2024 - 15:41 Report Abuse
பிங்க் கலர் குல்லா ஒருநாள் கருப்பு குல்லாவையும் ஏற்கும்.
0
0
Reply
Priyan Vadanad - Madurai,இந்தியா
05 அக்,2024 - 15:37 Report Abuse
தெய்வப்பிறவி சொல்லிப்புட்டார் கேட்டுக்கோங்க. ஏதோ ஞாபக கொளரல அவருடைய கட்சிய ஆடுறவங்கள பத்தி சொல்லிடப்போறார்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement