மதுரை விமானம் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட, 'ஏர் இந்தியா' விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, மீண்டும் சென்னையில் தரையிறங்கியது. நேற்று மதியம் 12:30 மணிக்கு புறப்பட்ட இந்த விமானத்தில், காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் உட்பட, 124 பேர் பயணித்தனர். நடுவானில் பறந்த போது, இயந்திர கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை சிக்னல் வந்தது.

உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி தகவல் தெரிவித்தார். அதன்பின், விமானம் மீண்டும் தரையிறங்க அறிவுறுத்தப்பட்டது. விமானத்தின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, மாலை 4:30 மணிக்கு மதுரை சென்றது.

Advertisement