சிவகங்கை பிஷப் இல்லத்தில் பணமோசடி: கணக்கர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் பிஷப் இல்லத்தில், 2019 முதல் கணக்கராக பணிபுரிந்தார். ஜூலை மாதத்துடன் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். பொருளாளராக ஆரோக்கியசாமி என்பவர் நியமிக்கப்பட்டார். இவர், பிஷப் இல்ல வங்கி கணக்குகளை ஆய்வு செய்தார்.

அதில், கணக்கராக பணிபுரிந்த பிரவீன், போலியான பணிகளை செய்ததாக ஐந்து பேருக்கு காசோலை வாயிலாக, 24 லட்சத்து 95,000 ரூபாய் அனுப்பியது தெரிந்தது. அந்த பணத்தை பிரவீன் கையாடல் செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், பிஷப் இல்ல நிர்வாகம் சார்பில் பொருளாளர் ஆரோக்கியசாமி புகார் அளித்தார். அதையடுத்து, கணக்கர் பிரவீனை, இன்ஸ்பெக்டர் மன்னவன் நேற்று கைது செய்து விசாரிக்கிறார்.

Advertisement