அரசு பள்ளியில் கணினியை திருட முயன்ற வாலிபர் கைது


பள்ளிப்பாளையம்: வெப்படை அருகே, சவுதாபுரம் அரசு பள்ளியில் கணினியை திருட முயன்ற வாலிபரை, வெப்படை போலீசார் கைது செய்-தனர்.


பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த சவுதாபுரம் பகு-தியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. நேற்று பள்ளி விடு-முறை என்பதால், முன்புற கேட் பூட்டப்பட்டிருந்தது. மதியம், 1:00 மணியளவில், 26 வயதுடைய வாலிபர் ஒருவர், பள்ளி சுற்றுச்-சுவரில் ஏறி குதித்து வளாகத்திற்குள் சென்றார். பின், கணினி அறையின் கதவை உடைத்து, அங்கிருந்த கணினியை திருடிச் சென்றார். இதை அவ்வழியாக சென்ற மக்கள் பார்த்து சத்தமிட்-டுள்ளனர்.

இதனால் பயந்த வாலிபர் தப்பிச்செல்ல முயன்றார்.
அதற்குள் பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து, வெப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், மேட்டுகடை பகு-தியை சேர்ந்த பிரகாஷ், 26, என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

Advertisement