கேரளாவில் தங்கம் கடத்துவது யார்? இடதுசாரி எம்.எல்.ஏ., சர்ச்சை

திருவனந்தபுரம்: ''மலப்புரம் சர்வதேச விமான நிலையம் வழியாக தங்க கடத்-தலில் ஈடுபடும் பெரும்பாலானோர் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த-வர்கள்,'' என, மா.கம்யூ., - எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் தெரி-வித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


கேரளாவின் மலப்புரம் மாவட்டம், கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் மூலமாக, அதிக அளவில் தங்க கடத்தல் நடப்பதாக முதல்வர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்-படுத்தியது. இதை தொடர்ந்து, தன்னுடைய வார்த்தைகள் திரிக்-கப்பட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார்.


இந்த பரபரப்பு ஓய்வதற்குள், ஆளுங்கட்சியை சேர்ந்த தாவனுார் எம்.எல்.ஏ.,வான கே.டி.ஜலீல் வெளியிட்டுள்ள

சமூகவ-லைதள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
தங்க கடத்தல், ஹவாலா போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த மத பெரியவர்கள் இதை கண்டிக்க வேண்டும். இல்லையெனில் பிற

மதத்தை சேர்ந்தவர்கள் இதை சுட்டிக்காட்டினால், அது முஸ்லிம் சமூகத்தையே இழிவுபடுத்துவ-தாக அமையும். தங்க கடத்தல் மத விரோத செயல் என, மத பெரியவர்கள் அறிவிக்க வேண்டும் என்ற கருத்தால் சிலர்

வருத்-தப்படுவது ஏன் என்பது வியப்பாக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
''இது மிக மோசமான அவதுாறு. இந்த தகவல் அவருக்கு எங்கு கிடைத்தது? எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்-கிறார்,'' என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மூத்த தலைவர் பி.எம்.ஏ.சலாம் கேள்வி

எழுப்பியுள்ளார்.
இடதுசாரிகள் ஆதரவு பெற்ற சுயேச்சை எம்.எல்.ஏ.,வும், தங்க கடத்தல் விவகாரம் பூதாகரமாக வெடிக்க காரணமானவருமான அன்வரும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement