ஜாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் ஆவேசம் கடம்பூர் மலையில் வெடித்தது போராட்டம்

சத்தியமங்கலம்: மலையாளி இன ஜாதி சான்றிதழ் கேட்டு, பள்ளி மாணவர்கள், மலையாளி இன மக்கள், கடம்பூர் மலையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.


போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறியதாவது சத்தி தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த, 15 ஆயிரம் மலையாளி இன மக்கள், 60 ஆண்டுக-ளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். தமிழகத்தில் சேலம், தர்ம-புரி, திருவண்ணாமலை உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இன மக்களுக்கு, எஸ்.டி., பட்டியலில் ஜாதி சான்று பெற்றுள்ளனர். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்-கின்றனர். இதனால், 50ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் குழந்-தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகைகளை பெற முடி-யா மல் உள்ளனர். ஜாதி சான்று வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
கடம்பூர் மலை குத்தியாலத்துார் ஊராட்சி கரளியம், கல்கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பா-ளையம், அத்தியூர் உள்ளிட்ட, 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கை அடங்கிய பதாகைகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தும், 1,500க்கும் மேற்பட்ட மக்கள், நேற்று காலை, 9:30 மணி முதல் மாலை, 6:00 மணி வரை காத்-திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் நாளை (இன்று) போராட்டம் நடக்கும் என்று போராட்ட குழுவினர் தெரிவித்-தனர். முன்னதாக போராட்டம் நடத்தியவர்களிடம் சத்தி தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்-பாடு ஏற்படவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி, 2023 ஜூன், 19ம் தேதி, 2,500க்கும் மேற்பட்ட மக்கள் கடம்பூரில் நள்-ளிரவு வரை சாலை மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்-தக்கது.

Advertisement