இஸ்ரேலை கண்டித்து கம்யூ., ஆர்ப்பாட்டம்

ஈரோடு: மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா - இஸ்ரேல் நாடுகள், போர் தாக்குதலை கைவிடக்கோரி, ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் கம்யூ., கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பாலஸ்தீ-னத்தின் மீதான இன அழிப்பு போரை இஸ்ரேல் நிறுத்தி கொள்ள வேண்டும்.

பெண்கள், குழந்தைகளை கொன்று குவிக்கும் இஸ்-ரேலுக்கு அணு ஆயுதங்கள், தொழிலாளர்களை இந்திய அரசு அனுப்பக்கூடாது என வலியுறுத்தினர். மா.கம்யூ., மாவட்ட செய-லாளர் ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் பேசினர்.

Advertisement