'தேசிய நெடுஞ்சாலையை 6 வழி சாலையாக்கணும்'



பெருந்துறை: சேலம் - செங்கப்பள்ளி இடையிலான, 102 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையை, ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் கேட்டு கொண்டுள்ளார்.


இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், அவர் அளித்த மனு வில் கூறியி-ருப்பதாவது: சேலம் - செங்கப்பள்ளி இடையேயான, 102.5 கி.மீ., நீளம் சாலை, தற்போது நான்கு வழிச்சாலையாக உள்-ளது. இச்சாலை வளர்ந்து வரும் தமிழகம் - கேரளாவின் தொழில் நகரங்களை இணைக்கும் பிரதான சாலையாகும். இதை ஆறு வழிச்சாலையாக மாற்றினால், உள் கட்டமைப்பு மேம்படுத்-தப்படும். மக்களின் சிரமம் குறையும். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.

Advertisement