'துாய்மை தொழிலாளர்களுக்கு தரமான சீருடை வழங்கணும்'
ஈரோடு: தமிழ்நாடு தூய்மை பணியாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
தீபாவளியை முன்னிட்டு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் தரமான சீருடை வழங்க வேண்டும். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் பணி செய்தால், இரட்டை ஊதியம் வழங்க வேண்டும். கால் உறை, கையுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்-வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும், 16ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தலைவர்கள் சமாதிகளில் மனு கொடுக்க இருக்கும் போராட்டம் ஒத்தி வைப்பதாக தெரிவித்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement