ஊராட்சி துணை தலைவருக்கு மீண்டும் கையெழுத்து உரிமை

சென்னிமலை: சென்னிமலை யூனியன் பாலதொழுவு ஊராட்சி தலைவராக தங்க-மணி, துணை தலை வராக சத்யபிரியா உள்ளனர்.

ஊராட்சி நிர்-வாகத்துக்கு சத்யபிரியா ஒத்துழைப்பு தரவில்லை எனக்கூறி, காசோலையில் அவர் கையெழுத்திடும் உரிமையை ரத்து செய்து, கடந்த மார்ச் மாதம் ஈரோடு கலெக்டர் உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்-நிலையில் கலெக்டரின் உத்தரவை, ஐகோர்ட் ரத்து செய்து, காசோலைகளில் சத்யபிரியா கையெழுத்து உரிமையை நடைமு-றைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.

Advertisement