அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு; இ.பி.எஸ்., அறிவிப்பு
சென்னை: அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பேரணியை தொடங்கி வைத்தார். அவர், பா.ஜ.,வினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளை பறித்து இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி விதிகளுக்கு மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர் அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தளவாய் சுந்தரம், 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார்.
வாசகர் கருத்து (6)
mindum vasantham - madurai,இந்தியா
08 அக்,2024 - 15:07 Report Abuse
அதிமுகவை சரியான பாதைக்கு கொண்டு வர நல்ல கால கட்டம்
0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
08 அக்,2024 - 15:04 Report Abuse
எட்டப்பன் பாடிக்கு அழிவு நிச்சயம் அதிமுகவுக்கு முடிவுரை எழுதிவிடுவான்
0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
08 அக்,2024 - 14:39 Report Abuse
எடப்பாடிக்கு தலைகனம் வந்துவிட்டது. விசாரிக்க வேண்டி இருக்கிறது அதனால் நீக்கம் விசாரித்து குற்றம் இருந்தால் நீக்கி இருக்கலாம்தானே . என்ன அவசரம் கட்சி கலையும் 2026 க்கு முன்
0
0
Reply
Govinda raju - ,
08 அக்,2024 - 14:27 Report Abuse
அடுத்து பி. சே.பி தான்
0
0
Reply
மாயவரம் சேகர் - ,
08 அக்,2024 - 14:15 Report Abuse
ஜெஜெ வழக்குகளில் வக்கீலாக இருந்தவர்தானே ..திடீரென வழக்குகளில் வாதாடுவதில் இருந்து விலகி கொண்டார்.
அவர்தானே இவர் ?
0
0
Reply
Lion Drsekar - Chennai,இந்தியா
08 அக்,2024 - 14:15 Report Abuse
மிகவும் நல்ல மனிதர். எனக்கு நேரடியாக தொடர்பு கிடையாது. அம்மையார் முதல்வராக இருந்தபோது பிளஸ் டூ மாணவர் ஒருவர் வயது குறைவு என்பதால் தேர்வுக்கு அனுப்ப பள்ளி மறுத்துவிட்டது , அதற்க்காக நான் என்னுடைய நண்பரிடம் கூற அவர் நான் ஒருவரை அனுப்புகிறேன் என்று கூறி இவரைத்தான் அனுப்பினார் அவர் அடுத்த நிமிடமே எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் அரசு அலுவலகங்களுக்கு அந்த மாணவரோடு நேரில் வந்து எவ்வளவோ முயற்சி செய்தார் அது நடக்கவில்லை, இருந்தாலும் எளிமையானவர், என்பதற்க்காக இந்த பதிவு, வந்தே மாதரம்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement