குழந்தைகள் திருவிழா

வத்தலக்குண்டு : கணவாய்ப்பட்டி பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளியில் குழந்தைகள் விழா நடந்தது.பள்ளித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் கயல்விழி முன்னனிலை வகித்தார். முதல்வர் ரியா அருண் வரவேற்றார். டி.எஸ்.பி., செந்தில்குமார் , வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி முருகன், ஊராட்சி தலைவர் ரமேஷ், பேரூராட்சி கவுன்சிலர் மகாமுனி பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பசுவப்ரியா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பள்ளி அறங்காவலர் சித்தார்த் செய்திருந்தார்.

Advertisement