தி.மு.க., அரசை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், எம்.ஜி.ஆர்., மன்ற துணைச்செயலாளர் உமாதேவன் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, கருணாகரன், சேவியர்தாஸ், சிவாஜி, கோபி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், ஜாக்குலின், செந்தில்முருகன், குழந்தை, அசோக்குமார், கோட்டையன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் தமிழ்செல்வன், மண்டல தகவல் தொழில் நுட்ப துணைத் தலைவர் வெண்ணிலா, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை தலைவர் வழக்கறிஞர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் நடந்த போராட்டத்தில் நகர செயலாளர் மெய்யப்பன், தேவகோட்டையில் நடந்த கூட்டத்தில் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், ராமச்சந்திரன், தசரதன், முருகன், பிர்லா கணேசன், பெரியசாமி, மானாமதுரையில் விஜிபோஸ், குணசேகரன், ஸ்ரீதர், ஜெயபிரகாஷ், திருப்புவனத்தில் நகர செயலாளர் நாகரெத்தினம், கணேசன், சோணை ரவி, இளையான்குடியில் நாகூர் மீரா, முனியாண்டி, ஈஸ்வரன், பாரதி, நாட்டரசன்கோட்டையில் கண்ணப்பன், அருள் ஸ்டீபன், பழனிசாமி, திருப்புத்துார் இப்ராகிம்ஷா, ஏ.வி.நாகராஜன், வடிவேலு, ராஜா, குணசேகரன், சிங்கம்புணரியில் வாசு, திருவாசகம், ஜெகன், நெற்குப்பையில் அடைக்கப்பன், கருப்பையா, ராஜமாணிக்கம், புதுவயலில் நல்லமுத்து, நரிவிழிகிருஷ்ணன், கண்டனுாரில் சேகர், ஆறுமுகம், மாசன், பள்ளத்துாரில் மாணிக்கம், செந்தில், சரண்யா செந்தில், கானாடுகாத்தான் குணசேகரன், சுப்பிரமணி உள்ளிட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.