ஹரியானா சட்டசபையில் பா.ஜ., பலம் 50 ஆக உயர்வு: கட்சியில் 2 சுயேச்சைகள் ஐக்கியம்

5

புதுடில்லி: ஹரியானா சட்டசபையில் பா.ஜ.,வின் பலம் 50 ஆகிறது. சுயேச்சையாக வெற்றி பெற்ற தேவேந்தர் கத்யான் மற்றும் ராஜேஸ் ஜூன் இருவரும் மத்திய அமைச்சரும் ஹரியானா பா.ஜ., மாநில பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதான் முன்னிலையில், கட்சியில் இணைந்தனர்.

கத்யான், பா.ஜ.,வில் சீட் கிடைக்காமல் கனவுர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
ராஜேஸ் ஜூன், பஹதுர்ஹா தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு,பா.ஜ., வேட்பாளரை தோற்கடித்தவர்.

அதேபோல, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால், மார்ச் மாதம் பா.ஜ.,வில் இணைந்தார், ஆனால் அவருக்குச் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டார், அவர் தனது ஆதரவையும் பா.ஜ.,வுக்கு வழங்குவார்.


சுயேச்சைகள் இருவர் இணைந்த நிலையில் ஹரியானா சட்டசபையில் பா.ஜ.க.,வின் பலம் 48 உறுப்பினரிலிருந்து 50 ஆக அதிகரிக்கிறது.

Advertisement