அதிமுக நிர்வாகி மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல்

வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளே அதிமுக பேரூர் செயலாளரை, திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் பேரூர் அதிமுக செயலாளர் ரவி.60. இவர் நேற்று வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்ற அதிமுக மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பேசியதாக கூறப்படுகிறது.
இன்று ரவி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்று செயல் அலுவலர் அருள் மொழியிடம் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் செய்த ஒப்பந்த பணிக்கான பிடித்தம் தொகையை விடுவிக்க கோரி பேசிக் பேசிக் கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த பேரூராட்சி தலைவி பூங்கொடியில் கணவரும், திமுக மாவட்ட பொருளாளருமான அலெக்சாண்டருக்கும் ரவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அலெக்சாண்டர் மற்றும் அவரது சகோதரரான பேரூர் திமுக செயலாளரும், பேரூராட்சித் துணைத் தலைவருமான அன்புச் செழியன் இருவரும் சேர்ந்து ரவியை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Advertisement