ஈ.வெ.ரா., சாலையில் நெரிசல் குறைக்க புதிதாக 'யு - டர்ன்'

சென்னை,
ஈ.வெ.ரா., சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ரிப்பன் மாளிகை அருகே, 'யு - டர்ன்' வசதியை, போக்குவரத்து போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.

ராஜா முத்தையா சாலையிலிருந்து வரும் வாகனங்கள், பி.எல்.சி., சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, காந்தி இர்வின் சந்திப்பு நோக்கி செல்ல அனுமதிக்கப்படுவதால், ஈ.வெ.ரா., சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் விதமாக, ரிப்பன் மாளிகை அருகே, 'யு டர்ன்' வசதியை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தி உள்ளனர்.

இனி, ராஜா முத்தையா சாலையிலிருந்து பி.எல்.சி., சந்திப்பிற்கு வரும் வாகனங்கள் அனைத்தும், வலது புறம் திரும்ப அனுமதி கிடையாது.

மாறாக அவ்வாகனங்கள், இடது புறம் திரும்பி, ரிப்பன் மாளிகை அருகே உள்ள யு டர்னில் திரும்பிச் செல்லலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் ஈ.வெ.ரா., சாலை - பி.எல்.சி., சந்திப்பில் காத்திருப்பது குறைக்கப்படுவதுடன், போக்குவரத்தும் தங்கு தடையின்றி செல்லும் என, கிழக்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Advertisement