த.வெ.க., மாநாட்டு திடல் வடக்கு மண்டல ஐ.ஜி., ஆய்வு

விக்கிரவாண்டி:நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழர் வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி .சாலை என்ற இடத்தில், அக். 27ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டிற்கான பணிகளை மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மாநாடு நடைபெற உள்ள இடத்தை, நேற்று மதியம் 2:00 மணி அளவில் வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அப்போது, கட்சி தலைவர் விஜய் வந்து செல்ல தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கான பாதுகாப்பு, வி.ஐ.பி.,களின் பாதுகாப்பு, தொண்டர்கள் அமர எத்தனை நாற்காலிகள் போடப்பட உள்ளது, உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார்.

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமிட்டல், எஸ்.பி., தீபக் சிவாச், ஏ.டி.எஸ்.பி., திருமால், டி.எஸ்.பி., நந்தகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement