கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கொசு ஒழிப்பு
பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம், அக். 10-
கிருஷ்ணராயபுரம் பகுதியில், தினமும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. மாலை 6:00 மணிக்கே கொசுக்கள் வந்து விடுகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் சார்பில், மழை நீர் தேங்கிய இடங்களில் நீரை அகற்றுதல், குப்பை அள்ளுதல், பிளீச்சிங் பவுடர் தெளிப்பு ஆகிய பணிகள் நடந்தன.

Advertisement