யோகா போட்டியில் சாம்பியன் மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு

காரைக்கால்: மாநில அளவிலான யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை அமைச்சர் திருமுருகன் பாராட்டினார்.

புதுச்சேரி உப்பளத்த்தில், மாநில அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

போட்டியில், காரைக்கால் முகுந்தன் யோகாசன அகாடமி மாணவர்கள் 14 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மாணவர்களை, அமைச்சர் திருமுருகன் பாராட்டி, வாழ்த்தினார்.

Advertisement