கவிதை போட்டி: மாணவருக்கு பாராட்டு

ஆர்.எஸ்.மங்கலம் : பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தேவிபட்டினம் அருகே வேலு மனோகரன் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரியில் மாவட்ட அளவில் பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட அளவில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவர் சபரிவேல் 17, கலந்து கொண்டு கவிதைப் போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றார்.

இந்நிலையில், கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்த மாணவர் சபரிவேலை தலைமை ஆசிரியர் சுயம்புலிங்கம் தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டினர். தொடர்ந்து முன்னாள் மாணவர் சங்க தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர் அப்பாஸ் மாணவருக்கு சால்வை அணிவித்து பாராட்டினர்.

Advertisement