உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. நேற்று இரவு கோயில் முன்பு உலக நன்மைக்காக வேத மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது. உஜ்ஜயினி மாகாளி அம்மனுக்கு அபிேஷகங்கள், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement