கொலு பொம்மைகள் விற்பனை மும்முரம்
விருதுநகர் : விருதுநகரில் முதல் நவராத்திரி துவங்கி நடந்து வரும் சூழலில் கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
நவராத்தி விழாவிற்காக கதர் பவன், தேசபந்து மைதான கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்தன. கதர் பவனில் வைகுண்டம் செட், ரிஷப வாகன செட், லலிதாம்பிகை செட், ரிஷப வாகனம் செட், நவகிரகம் செட், பீம் சோட்டா ஆகிய செட் பொம்மைகளும், பால விநாயகர், லிங்கம் மீனாட்சி, சிவகுடும்பம், வள்ளலார், ஆண்டாள், அத்திவரதர் ஆகிய தனி பொம்மைகளும் கிடைக்கின்றன. இங்கு பொம்மைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.
தினசரி கொலு பொம்மை, கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதே போல் மார்க்கெட் பகுதிகளில பல விதமான சுவாமி பொம்மைகள், காமதேனு பொம்மைகள் வந்துள்ளன. மக்கள் கொலு வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement