செக் போஸ்டில் புகுந்த லாரி உயிர் தப்பினார் எஸ்.எஸ்.ஐ.,

திருச்சி : திருச்சியில் இருந்து கரூர் செல்லும் பாதையில், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே குடமுருட்டி பாலம் முன், மாநகர் கோட்டை போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த வழியே வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்வதால், போலீஸ் செக் போஸ்டாக செயல்பட்டு வருகிறது.


நேற்று காலை, கரூரில் இருந்து வந்த லாரி, புறக்காவல் நிலையம் மீது மோதியது. இதில் காவல்நிலையத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அப்போது, அங்கு பணியில் இருந்த கோட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ., நாகராஜன், 55, என்பவர், இடிபாடுகளில் சிக்கி, அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். லாரியை ஒட்டி வந்த டிரைவர் சுகுமாரை பிடித்து விசாரித்தபோது, கோவையில் இருந்து தொடர்ந்து லாரியை ஓட்டி வந்ததால், துாக்க கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement