காதலியை கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை
சிவகங்கை:சிவகங்கை: திருமணத்திற்கு மறுத்த காதலியை கொலை செய்த காதலன் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் மோனிஷா என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால், ஆகாசை, திருமணம் செய்ய மோனிஷா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த ஆகாஷ் அரிவாள்மனையால் மோனிஷாவை கழுத்தறுத்து கொலை செய்தார். பிறகு பீர்பாட்டிலால் தன்னை தானே குத்திக் கொண்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement