தென்கொரிய பெண் கவிஞருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு
ஸ்டாக்ஹோம்: தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரபல விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஒவ்வொரு ஆண்டும், அறிவியல், இலக்கியம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்து விளங்கியவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு பெறுவோர் பதக்கத்துடன், 8.4 கோடி ரூபாய் ரொக்கப் பரிசையும் பெறுவர். ஒன்றுக்கும் மேற்பட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால், இந்த பணம் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். இந்தாண்டுக்கான நோபல் பரிசு அக்., 7 முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. மனித வாழ்க்கை குறித்த கவிதைக்காக தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
வாசகர் கருத்து (2)
kulandai kannan - ,
10 அக்,2024 - 18:24 Report Abuse
தென் கொரியாவில் கிறித்தவ மதம் அதிகரிக்கும் போதே இதையெல்லாம் எதிர்பார்க்கலாம்.
0
0
Reply
Rpalnivelu - Bangalorw,இந்தியா
10 அக்,2024 - 18:18 Report Abuse
நம்ம கட்டு அறிமுகப் படுத்திய கவிதாயினிக்கு ஒரு ஆடினரி பட்டமும் கிடையாதா ?
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement