தலைநகரில் ஒரு வாரத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்

8


புதுடில்லி: டில்லியில் இன்று ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான கொகைன் போதை பறிமுதல் செய்யப்பட்டதை சம்பவத்தை தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் தலைநகரில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் டில்லியின் மேற்கு பகுதியான ரமேஷ் நகரில் இன்று போதை பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு ரெய்டு நடத்தி 200 கிலோ கொகைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ. 2000 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த 02ம் தேதியன்று டில்லியின் தெற்கு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி 500 கிலோ கொகைன் போதை பொருளை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து கடந்த 06-ம் தேதியன்று டில்லி திலக் நகர் பகுதியில் 400 கிலோ ஹெராயின் மற்றும் 160 கிராம் கொகைன் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்து ஆப்கனை சேர்ந்த இருவரை கைது செய்தனர்.

அதேநாளில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 கோடி மதிப்புள்ள 1,660 கிராம் கொகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்து, லைபீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் தலைநகரில் ரூ. 7 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement