மீனவர் குடிசை தீக்கிரை ரூ.7 லட்சம் எரிந்து நாசம்

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் கேசவராம். தன்னுடைய பழைய வீட்டை இடித்து, புதிய வீடு கட்டவுள்ளார்.

இதையடுத்து, பக்கத்து வீட்டின் மாடியில், கீற்றுக்கொட்டகை அமைத்து வசித்தார். நேற்று காலை 2:00 மணிக்கு, கீற்றுக் கொட்டகையில் தீப்பற்றி, முற்றிலும் எரிந்தது. மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

இந்த தீவிபத்தில், வீடு கட்டுவதற்காக வைத்திருந்த, 7 லட்சம் ரூபாய், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், ஜி.பி.ஆர்.எஸ்., சாதனம், மீனவர் சங்க உறுப்பினர் அட்டை, ஆதார் உள்ளிட்ட தீக்கிரையாகின.

அடிக்கடி ஏற்பட்ட மின்னழுத்த குறைபாடு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டதாக, அப்பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து, கேசவராம் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement