தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரியால் கடும் அவதி

திருவாலங்காடு,:திருவாலங்காடு ரயில் நிலைய சாலை வழியே, தார்ப்பாய் கொண்டு மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகளால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்து சவுடு மண் எடுத்துச் செல்லும் லாரிகள், பெரியகளக்காட்டூர், திருவாலங்காடு ரயில்வே கேட் அமைந்துள்ள சின்னம்மாபேட்டை சாலை வழியாக சென்று வருகின்றன.

இவ்வாறு சவுடு மண் மற்றும் எம் - சாண்டு ஏற்றிச் செல்லும் லாரிகள், இவ்வழியே அதிவேகமாகவும், தார்ப்பாய் கொண்டு மூடாமலும் செல்வதால், மண் துகள்கள் சிதறி இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோரின் கண்களில் விழுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

இந்நிலையில், தார்ப்பாய் மூடாமல் செல்லும் சவுடு மண் லாரிகள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement