கடல்பாசி வளர்ப்பு பூங்கா பணி: அதிகாரிகள் ஆய்வு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி கடலோரப் பகுதியில் கடல்பாசி வளர்ப்பு பூங்கா அமைப்பதற்கு கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் நடக்கிறது.

இந்நிலையில் கடற்பாசி வளர்ப்பு பூங்கா கட்டுமானப் பணி குறித்து மீன்வளத்துறை இயக்குனர் ஜெகதீஸ்வரி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கட்டுமான பணியின் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன் கடல்பாசி வளர்ப்புக்கான கட்டமைப்புகள் குறித்தும், மீனவர்களின் பங்களிப்பு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மீன்வளத்துறை இணை இயக்குனர் ஆறுமுகம், துணை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் கோபிநாத் உட்பட்ட அப்பகுதி மீனவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement