கல்லுாரியில் கருத்தரங்கம்
இளையான்குடி: இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி வணிகவியல்துறை மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் அமைப்பு இணைந்து பயனுள்ள ஆராய்ச்சி கட்டுரை எழுதும் முறைகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார்.முதல்வர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். உதவிப்பேராசிரியர் நஷீர்கான் அறிமுகம் செய்தார். வணிகவியல் துறை இணைப்பேராசிரியர் பரமசிவன் பயனுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதும் முறைகள் மற்றும் ஆராய்ச்சி நிதிகள் பெறும் முறைகள் குறித்து பேசினார்.
உதவிப்பேராசிரியர் நாசர் நன்றி கூறினார். மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement