சேத்துப்பட்டு ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
சென்னை, சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் உள்ள ஏரியில், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தவறி விழுந்துவிட்டதாக, அங்கு பூங்கா பராமரிப்பு மேற்பாவையாளராக பணிபுரியும் சுகுணன், 57, என்பவர், கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தார்.
தீயணைப்பு படையினர் வந்து, ஏரியில் மூழ்கிய வாலிபரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த கீழ்ப்பாக்கம் போலீசார், உயிரிழந்த இளைஞர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement