அஜித்பவார் கட்சியில் ஐக்கியம்: நிஜ அரசியல்வாதியானார் நடிகர் சாயாஜி ஷிண்டே
மும்பை: பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டே , நேற்று ( அக்.,11) மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங். கட்சியில் ஐக்கியமானார்.
வில்லனாக, குணசித்திர நடிகராக, அரசியல்வாதியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வருவபவர் சாயாஜி ஷிண்டே 65, நேற்று ( அக்.,11) மஹாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜ., கூட்டணியில் உள்ள பிரதான கட்சியான அஜித்பவாரின் தேசியவாத காங்.கட்சியில் இணைந்தார்.
ஏராளமான படங்களில் அரசியல்வாதியாக நடித்தவர் தற்போது நிஜத்திலும் அரசியல்வாதியாகியுள்ளார் .வரப்போகும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலை மனதில் வைத்து தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் அறிவுறுத்தலின் படி அடுத்த மாதம் தேர்தல் பிரசாரத்தை துவக்க போவதாக அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement