பீரோவை உடைத்து நகைகள் திருட்டு
புதுச்சேரி : அரியூர், ஆனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் அழகர், 64; ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி ஜெயலட்சுமி, 55, பேத்தி அக் ஷரா, 9, ஆகியோருடன் வீட்டை பூட்டி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1:30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை திருடிக்கொண்டு, பின் ஜெயலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயின் அறுத்தார்.
ஜெயலட்சுமி கூச்சலிடவே அவரை தாக்கி, செயின் உட்பட 18 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement