பீரோவை உடைத்து நகைகள் திருட்டு 

புதுச்சேரி : அரியூர், ஆனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் அழகர், 64; ரைஸ் மில் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மனைவி ஜெயலட்சுமி, 55, பேத்தி அக் ஷரா, 9, ஆகியோருடன் வீட்டை பூட்டி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1:30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த 12 சவரன் நகைகளை திருடிக்கொண்டு, பின் ஜெயலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தாலி செயின் அறுத்தார்.


ஜெயலட்சுமி கூச்சலிடவே அவரை தாக்கி, செயின் உட்பட 18 சவரன் நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகினறனர்.

Advertisement