அரசு பஸ்ஸில் சிக்கி கணவன் கண்முன்னே பெண் தலை நசுங்கி பலி

சேலம்:சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு,40. அவரது மனைவி சத்தியபிரியா, 36. இருவரும் இன்று இரவு , வாழப்பாடி பகுதியில் இருந்து பேளூர் நோக்கி பைக்கில் சென்றபோது, பின்னால், கள்ளக்குறிச்சி நோக்கி வந்த அரசு பஸ், பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி பிரபு அவரது மனைவி சத்திய பிரியா இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அரசு பஸ் பின் சக்கரத்தில் சிக்கி சத்திய பிரியா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலின் பேரில் வாழப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement