மழையால் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதிகளில், 1,080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும், 17 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இப்பகுதியில் பட்டாசு உற்பத்தி பணிகள் தீவிரமாக உள்ளன.


பட்டாசு உற்பத்தி பாதிப்பு



சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்தாலே பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படும். மழை பெய்து ஈரம் காயாத நிலையில், பட்டாசு உற்பத்திக்கு வழியில்லை.


வெயில் அடிக்காவிட்டால் பட்டாசுகளை காய வைக்க முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே உற்பத்தி சதவீதம் குறைந்த நிலையில், மழையால் மேலும் உற்பத்தி சதவீதம் குறைய வாய்ப்புள்ளது.


இதனால், பட்டாசு பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. தீபாவளி நெருங்குவதால், இறுதிக்கட்ட பட்டாசு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில் உற்பத்தி பாதிப்பால் உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.

Advertisement